பண்புடன் குழுமத்தின் சித்திரைத் திருநாள் சிறப்புப் போட்டிகள்

அன்பினிய நண்பர்களே,

முகமன்களும் வாழ்த்துகளும்!!

"வாழ்வின் மறக்க முடியா நிகழ்வு" என்ற தலைப்பில் வெளியில் சொல்லக்கூடிய.. உங்கள் வாழ்வை புரட்டிப் போட்ட அல்லது உங்களால் மறக்க இயலாத அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு நிகழ்ந்தவை அல்லது கேட்டறிந்த நிகழ்வை கதையாக, கட்டுரையாக, கவிதையாக எழுதி அனுப்புங்கள். சுதந்திரம் உங்களிடம்...புகுந்து ஆடுங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி: panbudanav@gmail.com

மின்னஞ்சலின் தலைப்பு படைப்பின் தலைப்பாக இருக்க வேண்டும்.

படைப்புகள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி:
மே 15, 2011 (ஐக்கிய அரபு நேரம் நள்ளிரவு 12 மணி வரை)

படைப்புகளுடன் “இந்த படைப்பு எனது சொந்த படைப்பாகும். முடிவுகள் வரும் வரை இந்தப் படைப்பை வேறு எந்த ஊடகத்திலும் வெளியிட மாட்டேன் என உறுதிகூறுகிறேன்” என்ற உறுதிமொழியும் இணைக்கப் பட வேண்டும்.

இந்த போட்டிக்கான முடிவுகள் 2011, ஜூன் 3ம் தேதி வெள்ளி இரவு அமீரக நேரம் 8 மணிக்கு முன்னதாக வெளியிடப்படும்.

போட்டிக்கான குழுவில் சுபைரும், ஜீவ்ஸும் இருப்பர்.

போட்டிக்கான படைப்புகளை மேலே குறிப்பிடப்பட்ட மின்னஞ்சல் தவிர வேறெந்த முகவரிக்கும் அனுப்பக் கூடாது.

ஒருவர் எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். ஆனால், ஒருவருக்கு ஒரு பரிசு மட்டுமே வழங்கப்படும்.

போட்டிக்கான படைப்புகள் panbudan.blogspot.com வலைப்பூவிலும், குழுமத்திலும் இடப்படும்.

போட்டிக்கான பரிசுகள்

1. முதல் பரிசு - ரூ 500 மதிப்புள்ள புத்தகங்கள்
2. இரண்டாம் பரிசு - ரூ 300 மதிப்புள்ள புத்தகங்கள்
3. மூன்றாம் பரிசு - ரூ 200 மதிப்புள்ள புத்தகங்கள்

ஆறுதல் பரிசு - மூன்று பேருக்கு ரூ 100 மதிப்புள்ள புத்தகங்கள்

இந்திய முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

வாருங்கள் வடம் பிடிப்போம்... சரித்திரத்தில் இடம் பிடிப்போம்.

தோழமையுடன்,
ஆசிப் மீரான்.