பண்புடன் - ஆண்டு விழா போட்டிகள்

இனிய நண்பர்களே!

நலம் விழைக!

இலவசமாக வழங்கப்படும் இணையக் குழுமங்களில் கூட முறையான கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ வாய்ப்பற்ற அவல நிலையைக் கருத்தில் கொண்டு அனைவருக்கும் அளப்பரிய கருத்துச் சுதந்திரம் என்ற எண்ணத்தோடு துவங்கப்பட்டதுதான் 'பண்புடன்' குழுமம்.


நேற்று நடந்தது போலத்தான் இருக்கிறது. ஆனால், காலத்தின் துரித நடையில் இன்றுடன் பண்புடன் துவங்கி ஒரு வருடம் நிறைவு பெறுகிறது என்பது வியப்பாக இருக்கிறது. இந்தச் சிறப்புமிகு நேரத்தில் சம்பிரதாயம் போல கதை, கவிதை, கட்டுரைப் போட்டிகளை நடத்தாமல் வித்தியாசமாக ஏதேனும் செய்ய முடிவு செய்ததன் விளைவாக சிறந்த படைப்புகளுக்கான அங்கீகாரம் வழங்கும் புதிய திட்டத்தை 'பண்புடன்' அறிமுகம் செய்கிறது.


ஆம் நண்பர்களே!!

ஆண்டு விழா என்பது ஏதோ ஒருநாள் கொண்டாட்டமாக மாறிவிடாமல் இருப்பதற்காகவும் சிறந்த படைப்புகளை பண்புடனுக்குத் தொடர்ந்து தரவேண்டுமென்பதற்காகவும், பண்புடன் இந்த வருடம் முழுவதும் போட்டிகளை நடத்தவிருக்கிறது.

என்னவென்று கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாமா?

படைப்பாளிகளுக்கு உற்சாகம் வழங்கும் விதத்தில் எல்லாவிதமான படைப்புகளையும் பண்புடன் போட்டிக்காக வரவேற்கிறது. போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் கதை, கவிதை, கட்டுரை, நையாண்டி, செய்திவிமர்சனம், விளையாட்டு, புனைவு,ஆன்மீகம் என எதைப்பற்றியும் எவர் மனமும் காயப்படாத வகையில் எழுதலாம்.

செப்டம்பர் 30ஆம் தேதி வரை வரும் படைப்புகள் முதல் மாதப் போட்டிக்காகக் கருதப்படும். அதன் பின் மாத இறுதிநாள் வரை வரும் படைப்புகள் அந்தந்த மாதங்களுக்கான படைப்புகளாகக் கருதப்படும்.இவ்வாறு அடுத்த ஆகஸ்டு 2009 வரை பன்னிரு மாதங்களுக்கு போட்டி தொடரும்.

படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudanav@gmail.com

இவ்வாறு அனுப்பப்படும் ப்டைப்புகள் ப்டைப்பாளியின் பெயர் அந்தந்த மாத முடிவுகள் வரும்வரை நீக்கப்பட்டு ப்ண்புடன் வலைப்பூவில் அனைத்து அன்பர்களும் பார்க்கும் வ்ண்ணம் வெளியிடப்படும் (பெயர் நீக்கப்படுவது படைப்பாளி யாரென்பது நடுவர்களுக்குத் தெரியாமல் இருக்க வேண்டுமென்பதற்காக மட்டுமே)

படைப்புகளை அனுப்பும்போது தலைப்பில் ஆண்டு விழா போட்டி - என்று மறக்காமல் குறிப்பிடவும். இவ்வாறு அனுப்பப்படும் படைப்புகளில் இருந்து ஒவ்வொரு மாதமும் நடுவர்கள் சிறந்த மூன்று படைப்புகளைத் தேர்ந்தெடுப்பார்கள்.

ஒவ்வொரு மாதப் போட்டி முடிவுகளை அறிவிக்கும்போதும் நடுவர்கள் யாரென்பதைத் தெரியப்படுத்துவோம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் மட்டும் ஆண்டு இறுதியில் விழா மலராகத் தொகுக்கப்பட்டு மின்னூலாக உருவாக்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படாத படைப்புகளும் நண்பர்கள் பார்வைக்காக பண்புடன் வலைப்பூ மற்றும் பண்புடன் குழுமத்தில் இடப்படும்.

இந்தப் போட்டிகளில் தமிழறிந்த அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்கலாம். (ஆகவே இதனை உங்கள் சக வலைப்பதிவு நண்பர்களுக்கும் சகோதரக் குழுமங்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் பரவலாக எடுத்துச் சொல்லுங்கள். நண்பர்கள் உங்கள் வலைப்பதிவிலும் போட்டியைப் பகிர்ந்து கொள்ளுங்கள்)

தனியாக எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமின்றி, படைப்புகள் உங்களது சொந்தமாகவும் பிற குழுமங்களிலோ அல்லது தளங்களிலோ வெளிவராதவையாகவும் இருத்தல் அவசியம்.


ஒருவரே எத்தனை படைப்புகளை வேண்டுமானாலும் அனுப்பலாம். அதே போல ஒருவரே அடுத்தடுத்த மாதங்களிலும் பரிசு பெறலாம். மூன்று முறை பரிசு பெறுபவர்கள் அடுத்தவர்களுக்கு வாய்ப்பளித்து விலகுவது சிறப்பென்று பண்புடன் கருதினாலும் அதை படைப்பாளியின் முடிவுக்கே பண்புடன் விட்டு விடுகிறது.

ஒவ்வொரு மாதமும் தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு படைப்புகளுக்கும் ஐநூறு இந்திய ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களோ அல்லது பணமோ ஊக்கத் தொகையாக வழங்கப்படும். இவ்வாறு அடுத்த ஆகஸ்டு மாதம் வரை 18000 இந்திய ரூபாய் அளவில் பரிசுகள் வ்ழங்கப்பட இருக்கின்றன.


புரவலர்களை அனுசரித்து இந்தத் தொகை அதிகப்படுத்தப்படலாம்.

குறிப்பிட்ட மாதத்திற்கான படைப்புகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்ட பின் ப்டைப்பாளர் தனது ப்டைப்புகளை பிற இடங்களுக்கு அனுப்புவதில் தடையேதும் இல்லை. ஆனால், போட்டிக்கு படைப்புகளை அனுப்பியிருந்தால் முடிவுவரும்வரை அந்தப் படைப்பை பிற தளங்களுக்கோ குழுமங்களுக்கோ அனுப்பாமல் இருக்குமாறு பண்புடன் உங்களைப் பணிவுடன் வேண்டுகிறது.

படைப்புகளை ஒருங்குறி (Unicode) எழுத்துருவில் அனுப்பி வைத்தால் நன்று.

எனவே,

இந்த வருடம் முழுவதும் எழுதுங்கள் - எப்போது வேண்டுமானாலும்.

ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களில் உற்சாகமாகப் பங்கு பெற்று வெற்றி பெறப் போகும் உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்

தோழமையுடன்
பண்புடன் - ஆண்டு விழா குழுவினர்

3 பின்னூட்டங்கள்:

சென்ஷி said...

பண்புடன்,-ஐ வாழ்த்துகிறேன்

அ.பொ.ஜெ.பூங்கதிர்வேல் said...

பண்புடன் "பண்புடனுக்கு வாழ்த்துக்கள்" தெரிவித்துக்கொள்வது

ஜெயலட்சுமி பதிப்பகம். உலக அளவிளான மாபெரும் கவிதைப் போட்டி.

மேலும் விவரங்களுக்கு...

www.jeyalakshmipublication.blogspot.com
www.pesumpenakkal2008.blogspot.com

அ.பொ.ஜெ.பூங்கதிர்வேல் said...

பண்புடன் "பண்புடனுக்கு வாழ்த்துக்கள்" தெரிவித்துக்கொள்வது

ஜெயலட்சுமி பதிப்பகம். உலக அளவிளான மாபெரும் கவிதைப் போட்டி.

மேலும் விவரங்களுக்கு...

www.jeyalakshmipublication.blogspot.com
www.pesumpenakkal2008.blogspot.com