பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - நிர்மலா - அறிமுகம்

இனிய தமிழ் உறவுகளே!

'பண்புடன்' குழும ஆண்டு விழாவை முன்னிட்டு நல்ல படைப்பாளிகளின் படைப்புகளை குழுமத்திற்குள் கொண்டு வரவேண்டுமென்ற ஆசையில் குழுமத்திற்கு அப்பால் இயங்கும் படைப்பாளிகளைப் பண்புடன் சார்பில் அணுகினோம். நமது நோக்கத்தைப் புரிந்து கொண்ட படைப்பாளிகள் தங்களது படைப்புகளை நமக்காக இங்கே பதிய இசைவு தெரிவித்திருப்பதை சொன்னோம் அல்லவா?

வாரம் ஒவ்வொருவராக வந்து நம்மை வசப்படுத்தவிருக்கும் அந்த அன்புநிறை படைப்பாளின் வரிசையில்
முதலாவதாக வந்து இந்த இழையைச் சிறப்பு செய்பவர் சென்னையைச் சேர்ந்த கவிஞர் நிர்மலா அவர்கள்.

மரத்தடி குழுமத்தில் தொடர்ச்சியாக எழுதி வந்த நிர்மலாவின் கவிதைகள் எளிய மொழியில் பன்முகம் கொண்டு பேசுபவை. அவரது 'ஒலிக்கும் கணங்கள்' வலைப்பூ சமீப காலமாக ஒலிக்காமல் கிடப்பது வருந்தத்தக்கதென்றாலும் ஒலித்த காலங்களில் அவை மிகுந்த நேர்த்தியோடே ஒலித்தன.

கதை, கட்டுரை, கவிதை என்று பன்முகம் கொண்ட எழுத்தாற்றலுக்குச் சொந்தக்காரரான நிர்மலா அவர்கள் தம் கதைகளில் பெரும் கவனம் செலுத்தாமல் போனாலும் அவரது கவிதைகள் பெண்களின் வாழ்வியல் சிக்கல்களைப் பேசுபவையாகவும், மாந்த நேயம் நிறைந்த உணர்வுகளைப் பறை சாற்றுவதாகவும் அமைந்திருப்பதை எளிதில் உணர முடியும்.

நிர்மலாவின் பயண மற்றும் வாசிப்பனுவம் சார்ந்த கட்டுரைகள் தேர்ந்த மொழியில் எழுதப்பட்டவை. 'வார்த்தை' போன்ற சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதி வரும் நிர்மலாவுக்கு மிகப் பிடித்தது தனிமையான பயணங்கள்தானாம்.

மீதியை அவரது படைப்புகளின் வாயிலாக நீங்களே புரிந்து கொள்ளுங்கள்

நம் அழைப்பை ஏற்று நமக்காகப் படைப்புகளைப் பகிர்ந்து கொண்ட நிர்மலாவுக்கு நம் நன்றி -
நம் பண்புடன் சார்பில்.


--
பண்புடன் - ஆண்டு விழா குழுவினர்
"இணையப் பெருவெளியில் இன்பத் தமிழ்"
முதலாமாண்டு நிறைவு விழா
http://panbudan.blogspot.com/

0 பின்னூட்டங்கள்: