'பண்புடன்' அறிமுகம்

'பண்புடன்' - ஒருங்குறி எழுத்துருவில் இயங்கும் இந்தக் குழுமம் தமிழர்களுக்கிடையேயான கருத்தாடல்களைக் கண்ணியத்துடன் எடுத்துச் செல்லும் தளமாக இயங்கும். தமிழின் தொன்மை தொடங்கி நவீனக் கவிதைகளின் பாங்குவரை இங்கே பேசப்படும். பேசப்படுபவைகளின் மேலான கருத்துக்களில் நேர்மையான அணுகுமுறையோடு கருத்தாடல் செய்யவும், தமிழில் புதிய படைப்பாளிகளை உருவாக்கவும், எழுதித் தேர்ச்சி பெறவும் ஒரு எளிய தளமாக இந்தக் குழுமம் செயல்படும்.
இந்த எண்ணங்களோடு செயல்படத் துவங்கிய இந்தக் குழுமத்தின் முதலாமாண்டு நிறைவு விழாவில் இடம்பெறும் படைப்புகளைத் தாங்கி வருவதற்காகவே இந்தப் பதிவு.

பண்புடன் உங்களை இனிதே வரவேற்கிறது.
மேலுமதிகம் அறிய இங்கே சொடுக்குங்கள்

1 பின்னூட்டங்கள்:

KARTHIK said...

வாழ்த்துக்கள்.