Showing posts with label அறிவிப்பு. Show all posts
Showing posts with label அறிவிப்பு. Show all posts

பண்புடன் குழுமத்தின் சித்திரைத் திருநாள் சிறப்புப் போட்டிகள்

அன்பினிய நண்பர்களே,

முகமன்களும் வாழ்த்துகளும்!!

"வாழ்வின் மறக்க முடியா நிகழ்வு" என்ற தலைப்பில் வெளியில் சொல்லக்கூடிய.. உங்கள் வாழ்வை புரட்டிப் போட்ட அல்லது உங்களால் மறக்க இயலாத அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு நிகழ்ந்தவை அல்லது கேட்டறிந்த நிகழ்வை கதையாக, கட்டுரையாக, கவிதையாக எழுதி அனுப்புங்கள். சுதந்திரம் உங்களிடம்...புகுந்து ஆடுங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி: panbudanav@gmail.com

மின்னஞ்சலின் தலைப்பு படைப்பின் தலைப்பாக இருக்க வேண்டும்.

படைப்புகள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி:
மே 15, 2011 (ஐக்கிய அரபு நேரம் நள்ளிரவு 12 மணி வரை)

படைப்புகளுடன் “இந்த படைப்பு எனது சொந்த படைப்பாகும். முடிவுகள் வரும் வரை இந்தப் படைப்பை வேறு எந்த ஊடகத்திலும் வெளியிட மாட்டேன் என உறுதிகூறுகிறேன்” என்ற உறுதிமொழியும் இணைக்கப் பட வேண்டும்.

இந்த போட்டிக்கான முடிவுகள் 2011, ஜூன் 3ம் தேதி வெள்ளி இரவு அமீரக நேரம் 8 மணிக்கு முன்னதாக வெளியிடப்படும்.

போட்டிக்கான குழுவில் சுபைரும், ஜீவ்ஸும் இருப்பர்.

போட்டிக்கான படைப்புகளை மேலே குறிப்பிடப்பட்ட மின்னஞ்சல் தவிர வேறெந்த முகவரிக்கும் அனுப்பக் கூடாது.

ஒருவர் எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். ஆனால், ஒருவருக்கு ஒரு பரிசு மட்டுமே வழங்கப்படும்.

போட்டிக்கான படைப்புகள் panbudan.blogspot.com வலைப்பூவிலும், குழுமத்திலும் இடப்படும்.

போட்டிக்கான பரிசுகள்

1. முதல் பரிசு - ரூ 500 மதிப்புள்ள புத்தகங்கள்
2. இரண்டாம் பரிசு - ரூ 300 மதிப்புள்ள புத்தகங்கள்
3. மூன்றாம் பரிசு - ரூ 200 மதிப்புள்ள புத்தகங்கள்

ஆறுதல் பரிசு - மூன்று பேருக்கு ரூ 100 மதிப்புள்ள புத்தகங்கள்

இந்திய முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

வாருங்கள் வடம் பிடிப்போம்... சரித்திரத்தில் இடம் பிடிப்போம்.

தோழமையுடன்,
ஆசிப் மீரான்.

பண்புடன் ஆண்டு விழா - செப்டம்பர் & அக்டோபர் போட்டி முடிவுகள்

இனிய தமிழ் உறவுகளே!

இணைய வெளியில் இயங்கும் அன்பர்களுக்கு ஆசாத் அவர்களைப் பற்றிய தனிப்பட்ட அறிமுகத்திற்கு அவசியமில்லை. அதீத வாசிப்பனுபவமும், வாழ்க்கையைக் குறித்த தெளிவான அணுகுமுறைகளும் கொண்ட ஆசாத் அவர்களின் எண்ணம் வலைப்பூ அவர்களது பல படைப்புகளை தாங்கி நிற்கிறது. மலைனப்பட்ட எழுத்துகளுக்கிடையில் ஆசாத் அவர்களின் எழுத்து பாணி வித்தியாசமானது. தான் அறிந்த விசயத்தைத் தெளிவாகவும் சுவையாகவும் சொல்லும் ஆசாத் ஏற்கெனவே சத்தமில்லாமல் 'கானா', 'கஸல்' 'ஹஜ்' என்ற மூன்று நூல்களுக்கு ஆசிரியரும் கூட.

தேன்கூடு இணைய திரட்டி நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு வென்றிருக்கிறார். மரபுக் கவிதைகளிலும் சந்தத்திற்குப் பாட்டெழுதுவதிலும் வல்லவரான அவரது இந்தப் பன்முகத்தன்மைதான் அவரை பண்புடனின் ஆண்டு விழா போட்டிகளுக்கான நடுவராக அவரைத் தேர்வுபெற வைத்தது.

படைப்பாளிகள் யாரென்ற அறிமுகம் இல்லாமல் வெறும் படைப்புகளை மட்டுமே அவருக்கு அனுப்பி அதனை அவர் சீர்தூக்கி அளித்திருக்கும் தீர்ப்பு அடுத்த அஞ்சலில்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் அடுத்த போட்டிகளில் வெற்றி பெற இருப்பவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். தொடர்ந்தும் எழுதுங்கள். போட்டிகளுக்காக மட்டுமில்லாமல் உங்க்ளை நீங்களே உற்சாகப்படுத்துவதற்காகவும்.

முதல் பரிசு இரண்டாம் பரிசு என்றெல்லாம் இல்லாமல் போட்டிக்கு வந்த சிறந்த மூன்று படைப்புகள் என்ற வகையிலேயே தேர்வுகள் அமைந்தன.

வெற்றி பெற்றவர்களுக்கு பண்புடன் சார்பில் இந்திய ரூபாய் 500 மதிப்புள்ள புத்தகங்கள் எளிய பரிசாக அனுப்பி வைக்கப்படும். செப்டம்பரில் போட்டி முடிவுகள் அறிவிக்கப்படவில்லையென்பதால் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்குமே ஆறுதல் பரிசாக இந்திய ரூபாய் 100 மதிப்புள்ள புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்படும். பரிசுப் புத்தகங்களைப் பெறுவதெப்படி என்று பண்புடன் ஆண்டு விழா குழு சம்பந்தப்பட்டவர்களை உடனே தொடர்பு கொள்ளும்.

சொல்லவே தேவையில்லை - நம் அன்பு வேண்டுகோளை ஏற்று மிகச் சிறப்பாகப் பணியாற்றி படைப்புகளைத் தேர்வு செய்து தந்திருக்கும் அன்புக்குரிய ஆசாத் அவர்களுக்கு நம் நெஞ்சார்ந்த நன்றிகள்!!

தோழமையுடன்
ஆசிப் மீரான்

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - அறிவிப்புகள்

இனிய தமிழ் உறவுகளே!

'பண்புடன்' குழும ஆண்டு விழாவை முன்னிட்டு நம் குழுமத்தில் இயங்காத பிற நல்ல
படைப்பாளிகளின்
படைப்புகளை ஆண்டு விழாக் காலமான இந்த நேரத்தில் குழுமத்திற்குள் கொண்டு
வரச் செய்தாலென்ன
என்ற எண்ணத்தில் குழுமத்திற்கு அப்பால் இயங்கும் படைப்பாளிகளைப் பண்புடன்
சார்பில் அணுகினோம்.
நமது நோக்கத்தைப் புரிந்து கொண்ட படைப்பாளிகள் தங்களது படைப்புகளை நமக்காக
இங்கே பண்புடனில்
பதிய இசைவு தெரிவித்திருக்கிறார்கள்.


பண்புடனுக்காக எழுதப்பட்ட படைப்புகள் மட்டுமின்றி அவர்களது படைப்புகளில்
சிறந்தவைகள் சிலவற்றை
நம்மோடு பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டிருந்தோம். அவ்வாறே படைப்புகளை அனுப்பத்
துவங்கியிருக்கிறார்கள்
படைப்பாளிகள்.


வாரம் ஒவ்வொருவராக வந்து நம்மை வசப்படுத்தவிருக்கும் அந்த அன்புநிறை
படைப்பாளிகளுக்கு பண்புடன்
சார்பில் நன்றி கூறிக் கொள்வோம். கவிதை, கதை, கட்டுரை இன்னபிற என்று பல்துறை
சார்ந்த படைப்புகள்
இந்த இழையில் நமக்குக் கிடைக்கும் என்று நம்பலாம்.


உற்சாகமான வாசிப்பனுவத்திற்கு தயாரகுங்கள்.
உங்கள் கருத்துக்களையும் பின்னூட்டங்களையும் ஆர்வமுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
வரும் காலம் வாசிப்பனுவத்தின் விழாக்காலமாக அமையட்டும்

--
பண்புடன் - ஆண்டு விழா குழுவினர்
"இணையப் பெருவெளியில் இன்பத் தமிழ்"
முதலாமாண்டு நிறைவு விழா
http://panbudan.blogspot.com/

அறிவிப்பு

இணையப் பெருவெளியில் இயங்கும் படைப்பாளிகளை உற்சாகப்படுத்தும் நோக்கில், பண்புடன் தனது முதலாமாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மாதம் மூன்று ப்டைப்பாளிகளை தேர்ந்தெடுத்து கௌரவிக்க இருக்கிறது.
இந்த செப்டம்பர் துவங்கி அடுத்த வருடம் ஆகஸ்டு மாதம் வரை மாதம் மூன்று படைப்பாளிகளுக்கு பரிசுகள்.
மேலும் விபரங்களுக்காகக் காத்திருங்கள் இன்னும் சில தினங்கள் மட்டும்
-
பண்புடன் அங்கத்தினர்கள்