பெருங்காதலின் பொன்நிற கரையில்
- கூத்தலிங்கம்
உதயமான
ஒற்றை நிலவை முத்தமிட
ஆயிரம் உதடுகளாக மலர்ந்து
உதிர்கிறது விரிகடல்
மெல்லிய காமத்தின் விழைவை
சூடியிருக்கிறது
நீல மாலை வானம்
காற்றசைப்பில்
கிளை பிரிந்த சிறு பூவாக
கடவுளிடமிருந்து
நழுவிச் சிந்திய ஒரு துளி விந்து
நிறைவுறா அவாவின் தகிப்பில்
அலைமோதுகிறது பெருங்கடலாக
அதன் கரைகளில் அமர்ந்து காதலிக்கிறார்கள்
மனிதர்கள்
பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - கூத்தலிங்கம் - 1
மதியம் டிசம்பர் 4, 2008
பதிவு வகை : கவிதைகள், சிறப்பு விருந்தினர்
Subscribe to:
Post Comments (Atom)
1 பின்னூட்டங்கள்:
அதன் கரைகளில் அமர்ந்து காதலிக்கிறார்கள்
மனிதர்கள்////////////////
ம்ம்ம்ம்
Post a Comment