பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - செல்லமுத்து குப்புசாமி - அறிமுகம்

செல்லமுத்து குப்புசாமி - அறிமுகம்

உங்களில் பலருக்கு செல்லமுத்து குப்புசாமி பற்றித் தெரிந்திருக்கும். கரையோரம், பங்கு வணிகம் மற்றும் NEXT INDIA ஆகிய மூன்று வலைப் பதிவுகளைப் பேணி வருகிறார்.
http://karaiyoram.blogspot.com
http://panguvanigam.blogspot.com
http://nextindia.blogspot.com

இப்போது சத்தமில்லாமல் இயங்கும் பதிவர். அவரது வலைப்பதிவு career (அப்படி ஒன்று இருக்கிறதா?) இன் உச்ச கட்டமாக முன்னொரு காலத்தில் எழுதப்பட்ட 'அண்ணியின் அணைப்பில்' என்ற கதையைக் கூறலாம்.
http://karaiyoram.blogspot.com/2006/06/blog-post_30.html

ஷேர் மார்க்கெட்டில் நட்டமில்லாமல் இலாபம் ஈட்டுவது குறித்து அவர் எழுதிய 'இழக்காதே' புத்தகம் நவீனத் தமிழ் 'நான்பிக்ஷன்' எழுத்தில் மிக முக்கியமான மைல் கல். 2006 ஆம் வருடம் சென்செக்ஸ் 12 ஆயிரம் புள்ளியில் இருந்து 10 ஆயிரமாகச் சரிந்த போது எழுதிய இந்த நூல், 2008 இல் 21 ஆயிரத்தில் இருந்து 9 ஆயிரமாகச் சுருங்கிய போதும் பொருத்தமான ஒன்றாகவே நிற்கிறது.

செல்லமுத்து குப்புசாமியின் இன்னொரு புத்தகம் 'வாரன் பஃபெட் - பணக் கடவுள்'. சிறு வயதில் பேப்பர் போட்டுச் சம்பாதித்த வாரன் பஃபெட் உலகின் நம்பர் ஒன் செல்வந்தர் ஆன கதையை, அவரது வாழ்க்கையை தெளிவாகப் பதிவு செய்திருக்கும் நூல்.

http://www.kamadenu.com/cgi-bin/authour_search.cgi?authname=Chellamuthu%20Kuppusamy

நமது பண்புடன் குழுமத்திற்காக ஈழப் போராட்டத்தின் தொடக்கப் புள்ளியை ஏழு கட்டுரைகளில் ஒரு மினி-தொடராகத் தருகிறார்

0 பின்னூட்டங்கள்: