பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - அய்யப்ப மாதவன் - 2

சும்மா வினையாய்
- அய்யப்ப மாதவன்

சும்மா போன் பண்ணியிருந்தான் (ஒரு வேலையுமில்லாமல்)
சும்மா டாஸ்மாக்குக்கு போயிருந்தேன் ( காசில்லாமல்)
சும்மா அவனுக்கு போன் வந்தது ( அநேமதேயமாக)
சும்மா மயூரா ஓட்டலுக்கு வரச்சொன்னான் ( திட்டமில்லாமல்)
சும்மா அவனை பார்க்கப் போனோம் ( வெறுங்கையோடு)
சும்மா ஆட்டோவில் போனோம் ( காசு தராமல்)
சும்மா அவனை கைப்பேசியில் அழைத்தோம் ( ஓசியில்)
சும்மா அவன் எடுக்கவில்லை ( விளையாட்டாக )
சும்மா நாங்கள் கோபப்பட்டோம் ( எரிச்சலில்லாமல்)
சும்மா மயூராவின் பார் உதவியாளனை தொந்தரவு செய்தோம் ( தாட்சண்யமில்லாமல்)
சும்மா உதவியாளனும் தேடினான் ( நடிப்பாக)
சும்மா வெளியில் வந்தோம் (வீணாக )
சும்மா படிக்கட்டுகளில் இறங்கப் பார்த்தோம் ( பொழுதுபோக்காக)
சும்மா மூடியிருந்தது படிக்கட்டு வழி ( வெறுமையாக )
சும்மா லிப்டிக்காக காத்திருந்தோம் ( வேறு வழியின்றி)
சும்மா நின்றது கூட்டம் ( வெட்டியாக)சும்மா லிப்டிக்குள் ஏறி விட்டோம் ( காரணமின்றி )
சும்மா இரண்டு பேர் சுமை தாங்காமல் வெளியே போயினர் ( ஏமாற்றமாக)

சும்மா நாங்கள் சிரித்துக்கொண்டோம் ( மகிழ்ச்சியில்லாமல்)
சும்மா தரை வந்தது ( எதிர்பார்க்காமல்)
சும்மா வெளியேறினோம் ( களங்க்மில்லாமல்)
சும்மா நண்பன் கோபப்பட்டு அலைய விட்டவனை திட்டினான்( கோபமில்லாமல்)
சும்மா பாருக்கு போனோம் ( வேடிக்கையாக)
சும்மா மனைவி பேசினாள் ( உண்மையாக)
சும்மா விசு வந்தான் ( பொறுப்பாக)
சும்மா ஃபுல் வாங்கினோம் ( காசு தந்து )
சும்மா அறைக்கு வந்தோம் ( எதிர்பார்ப்போடு)
சும்மா குடித்தோம் புகைத்தோம் ( பழக்கமாக)
சும்மா பேசினோம் பேசிக்கொண்டிருந்தோம் ( இயல்பாக)
சும்மா இரவு போய்க்கொண்டிருந்தது ( நிற்காமல்)

0 பின்னூட்டங்கள்: