பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - என்.சொக்கன் - 4

அவரவர் மழை
கலீல் கிப்ரான் - தமிழில் என்.சொக்கன்


ஒரு பூனை, நாயிடம் சொன்னது, 'நண்பா, நீ முழு மனதுடன் பிரார்த்தனை செய், தொடர்ந்து நீ இப்படிக் கடவுளைப் பிரார்த்தித்துக்கொண்டே இருந்தாயானால், ஒரு நாள் ஆண்டவன் உனக்கு அருளுவார், இதில் எந்த சந்தேகமும் இல்லை, கடவுளின் கருணைப் பார்வை உன்மேல் பட்டுவிட்டால் போதும், வானத்திலிருந்து எலிகளாய்ப் பொழியும், நீ விருப்பமுள்ள அளவுக்கு அள்ளித் தின்னலாம் !'

இதைக் கேட்ட நாய், விழுந்து விழுந்து சிரித்தது, 'ஏ முட்டாள் பூனையே, எனக்கு ஒன்றுமே தெரியாது என்று முடிவுகட்டிவிட்டாயா ? என் வீட்டிலும் பெரியவர்கள் இருக்கிறார்கள், அவர்களும், என் முன்னோர்களும், எங்களுக்குச் சொல்லியிருக்கிறார்கள் - மனம் உருகிப் பிரார்த்தனை செய்தால், எலி மழை பொழியாது, எலும்பு மழைதான் பொழியும் ! அதை நாம் ஆசை தீரக் கடித்து மகிழலாம் !'

--
பண்புடன் - ஆண்டு விழா குழுவினர்
"இணையப் பெருவெளியில் இன்பத் தமிழ்"
முதலாமாண்டு நிறைவு விழா

0 பின்னூட்டங்கள்: