பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - ஃபஹீமா ஜஹான் - அறிமுகம்

தன் மன உணர்வுகளையும், தனது வாழ்வில் பார்க்கக் கேட்க அனுபவித்த நிகழ்வுகளையும் காத்திரமான கவிதைகளாக எழுதிவரும் முஸ்லிம் பெண் கவிஞர் ஃபஹீமா ஜஹான் இலங்கையைச் சேர்ந்தவர்.

இவர் 2002 இல் நடைபெற்ற உலக தமிழ், இஸ்லாமிய இலக்கிய சாகித்திய விருது வழங்கும் மாநாட்டில் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

அத்தோடு 2004 இல் உலகளாவிய ரீதியில் நடைபெற்ற 'யாத்ரா' கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசான வெள்ளி ரோஜா விருதையும், பணமுடிப்பையும் தனதாக்கிக் கொண்டார்.

சஞ்சிகைளில் மட்டும் எழுதி கொண்டிருந்த இவர் தற்போது வலைப்பதிலும் தனது கவிதைகளை பதிவு செய்ய தொடங்கியுள்ளார்.போட்டி போட்டுகொண்டு இவரின் கவிதைகளை பிரசுரம்செய்யவும், தங்களின் இணையதள சஞ்சிகைகளிலும் பதிவு செய்யவும் விருப்பம் கொண்ட இலக்கிய கூட்டத்துக்குள் முழுமையாக சிக்காமல் தனது தனித்துவான பதிவாக அமைய வேண்டும் என்ற விருப்பில் இவர் தனக்கென ஒரு வலைப்பதிவை உருவாக்கி அதில் தொடர்ந்தும் எழுதிவருகிறார்.

இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளைக் கொண்ட முதல் கவிதைத் தொகுப்பான ' ஒரு கடல் நீரூற்றி' பனிக்குடம் பதிப்பகத்தால் 2007 இல் வெளியிடப்பட்டது.1994 இலிருந்து பல கவிதைகள் எழுதிவரும் இவர் ஒரு கணித ஆசிரியையாகக் கடமையாற்றிவருகிறார்.

- ரிஷான் ஷெரீஃப்

1 பின்னூட்டங்கள்:

ஜமாலன் said...

இந்தவார நட்சத்திரம் பஹிமாவிற்கு வாழ்த்துக்கள்.

உங்கள் அறிமுகமும் அருமை.

அன்புடன்
ஜமாலன்.