பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - கூத்தலிங்கம் - 2

அசரீரி ஓவியம்
- கூத்தலிங்கம்


கவிதைக்கான அழகும் நளினமுமான
சொல் தேடி
வார்த்தைகளின் அம்பாரங்களை
கலைத்தபோது
எழுதப்படாத
என் வெள்ளைத் தாளிதழ் விளிம்பில்
பறந்து வந்தமர்ந்த வண்ணத்துப்பூச்சி
குழந்தை உள்நுழையும் ஓசையில்
திடுக்குற்று
சட்டெனப் பறந்து வெளி போந்தது

மேசைவிளக்கு ஒளிநீட்சி
கிடத்தியிருந்த
நீங்கா நீள் நிழலொன்று
சிறகசைத்துக் கொண்டிருந்தது
கவிதைக்காய்
தலைப்பிடப்பட்ட அடிக்கோட்டின் கீழே



--
பண்புடன் - ஆண்டு விழா குழுவினர்
"இணையப் பெருவெளியில் இன்பத் தமிழ்"
முதலாமாண்டு நிறைவு விழா
http://panbudan.blogspot.com/

0 பின்னூட்டங்கள்: