பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - மோகன் தாஸ் - 7

நாளை மற்றோரு நாளே - என் நினைவுகள்
- மோகன் தாஸ்


ஜி. நாகராஜன் பற்றி நான் முதலில் படித்தது. சு.ராவின் பிரமிள் பற்றிய நினைவோடையிலாகத்தான் இருக்கும். பின்னர் என் இலக்கிய வட்டம்(அல்லது உள்வட்டம்) பெரிதாக ஜி. நாகராஜனின் 'நாளை மற்றொரு நாளே' நாவல் பற்றி தெரியவந்தது. இந்த முறை பெங்களூர் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்த பொழுது சட்டென்று மனதைக் கவரும் விதமாக காலச்சுவடு ஸ்டாலில் இருந்த நாகராஜன் முழுத்தொகுப்பையும் வாங்கிவந்திருந்தேன். இது அவர் எழுதிய நாவல், குறுநாவல், சிறுகதைகள், கவிதைகள் முதற்கொண்டு ஜி. நாகராஜன் எழுதிய மொத்தத் தொகுப்பு. முதலில் பிரித்து வைத்து உட்கார்ந்தது, சுந்தர ராமசாமியின் - ஜி. நாகராஜன் பற்றிய நினைவோடை. அதற்கு காரணம் உண்டு, எல்லாம் பிரமிள் பற்றிய நினைவோடை படித்த காரணம் தான் மேலும் ஒரு காரணம் RP ராஜநாயஹம், சுரா ஜி. நாகராஜன் பற்றி எழுதியிருந்தைப் பற்றி சொன்னது. நினைவோடை படிக்க ஆரம்பித்த பொழுது சட்டென்று ஆரம்பமென்றில்லாமல் வானத்திலிருந்து குதித்த மாதிரி இருந்தது, பின்னர் தான் சு.ரா, ஜி. நாகராஜன் பற்றி சொல்லியிருந்த முதல் அரைமணிநேர கேசட் தொலைந்து போனதன் காரணமாக அப்படியிருந்தது என்று தெரியவந்தது. எத்தனைக்கெத்தனை நாசூக்காக சொல்லமுடியுமோ அத்தை நாசூக்காக சொல்லியிருந்தார் சு.ரா., ஜி. நாகராஜன் பற்றி. அப்படித்தான் நான் நினைக்கிறேன். அவ்வளவு தான் அதைப்பற்றி. பொதுவில் சொல்ல முடியாத எழுத்தில் கொண்டு வரமுடியாத கதைகளை பின் காலங்களில் இலக்கியவாதிகள் யாரையாவது சந்திக்கும் பொழுது கேட்டுக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன் ;).

நாவல் திருவாளத்தான் ஒருவனின் ஒரு நாள் வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிறது. ஒரு நாள் கதையை எப்படி நாவலாக எழுதிவிடமுடியும் கேள்வி எனக்கும் சட்டென்று எழுந்தது. ஆனால் வாழ்க்கையில் முன் பின் நகரும் ப்ளாஷ்பேக் உபயோகித்து நாவல் தன் லீலையைத் தொடர்கிறது. இந்த நாவலை நான் படிக்க ஆரம்பிக்கும் முன்பே தமிழின் மிக முக்கியமான நாவலில் ஒன்று என்ற விஷயம் எனக்குத் தெரிந்திருந்தது. எப்படி தமிழில் ஒரேயொரு நாவல் எழுதிய ஜி. நாகராஜனின் இந்த நாவல் தமிழின் குறிப்பிடத்தக்க நாவல்களில் ஒன்றானது என்கிற ஆச்சர்யம் இயல்பாகவே எழுந்தது. ஜி. நாகராஜன் எழுதியதே நாளை மற்றொரு நாள் என்கிற நாவலும் குறத்தி முடுக்கு என்கிற குறுநாவலும் தான். இதைத்தவிர்த்து சிறுகதைகளும் கொஞ்சம் கவிதைகளும் எழுதியிருந்தாலும். பெரிய அளவில் வந்தது என்றால் இந்த நாவலும் குறத்தி முடுக்கு மட்டும் தான். இந்த நாவலை தமிழில் வெளிவந்த நாவல்களில் உயரிய இடத்தில் வைக்க என் மனது இடம் தராவிட்டாலும் முக்கியமான நாவல்களில் ஒன்றாகவே நான் பார்க்கிறேன்.

காட்சிகளின் அருமையான விவரிப்பையும் உண்மையையே எழுதியிருப்பதைப் போன்ற ஒரு உணர்வையும் நீங்கள் இந்த நாவல் முழுவதுமே உணர முடியும். ஒரு இடத்திலிருந்து மற்றோரு இடத்திற்கு சட்டென்றூ நகரும் சாமர்த்தியம் அழகாய் கைக்கு வந்திருக்கிறது. நானறிந்த வரையில் நான் படித்த வரையிலும் சரி காமத்தை இத்தனை காதலுடன் உண்மைக்கு ரொம்பவும் நெருக்கமாய்ப் படித்ததது நினைவில் இல்லை. ஆனால் இந்த நாவலின் மூலமாய் ஜி. நாகராஜன் அதுவரை தமிழுக்கு பெரிதும் அறிமுகமாகியில்லாத தமிழகத்தின் இருண்ட பகுதிகளை வெளிக்கொணர்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். நாவல் எழுதப்பட்ட காலம் அந்த சுவாரசியத்தை அதிகப்படுத்துகிறது.

"அவன் சுயநலத்தில்தான் எத்தனை அழகு? சுயநலத்தை மறைக்க முயன்றால்தான் அது அசட்டுத்தனமாகவோ விகாரமாகவோ தோன்றுகிறது"

தன் மீது பானையை எறிந்துவிட்டு ஓடிப்போன தன் மகனைப்பற்றி நாவலின் கதாநாயகன் நினைக்கும் பொழுது வரும் வரிகள் இவை. ஜி. நாகராஜன் வாழ்க்கையை தொடர்ச்சியாய் அதன் பாணியிலேயே சென்று படித்திருக்கிறார் என்றே எண்ண வைக்கிறது.

கந்தன் ஒரு ரௌடி, மீனாவின் மேல் காதல் கொண்டு அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று நினைத்து அவளை மணந்து கொண்டு பின்னர் அதுவும் சரிவராமல் அவளையே மூலதனமாகப் பயன்படுத்தி தன் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பவன். விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை இத்தனை தூரம் நெருக்கமாக உணர்ந்து எழுதியிருக்கக்கூடிய சாத்தியம் ஆச்சர்யத்தைக் கொடுக்கிறது. இந்த நாவலைப் பற்றி எழுதுவதற்கென்று நிறைய இருந்தாலும் விமர்சனம் என்று எழுதுவதற்காக படிக்கும் பொழுதே சேர்த்து வைத்த குறிப்புத்தாள் கவனச்சிதறலாக காணாமல் போனதால் இங்கே நிறுத்திக் கொள்கிறேன். ஆனால் சுவாரசியமான நாவலொன்றைப் படிக்கும் திட்டமிருந்தால் நிச்சயம் நாளை மற்றொரு நாளே நாவலை நிச்சயமாகப் படிக்கலாம்.



குடிசைகளுக்கும் சாக்கடை விளிம்புக்கும் இடையே மூன்று அடி இருக்கும். அது நெடுகிலும் சாணமிட்டு மெழுகப்பட்டிருந்தது. கந்தனின் வீட்டையொட்டி, இந்த குறுகிய பகுதியில் ஒரு மூன்றுகல் அடுப்பின் மீது சிறிய பானையில் நீர் காய்ந்து கொண்டிருந்தது. அருகே ஒரு பெரிய பானையில் அரையளவுக்குத் தண்ணீர் இருந்தது.


கந்தன் குடிசைக்குள் நுழைந்தான். மீனா தரையைப் பெருக்கிக் கொண்டிருந்தாள்.


"துணியை வாங்கிட்டு வந்தாயா?" என்றான் கந்தன்

"உம், பெட்டியுள்ளாற இருக்கு" என்று சொல்லிக் கொண்டே மீணா நிமிர்ந்து நின்றாள். "உம், கூட்டு" என்றான் கந்தன்.


அவள் மீண்டும் குனிந்து பெருக்க ஆரம்பிக்கவும், அவன் அவள் பின்சென்று அவளைப்போலவே வளைந்து அவளைப் பின்புறத்திலிருந்து அணைத்தான்.


'உம். விடுங்க.. இப்பெல்லாம் என்ன, இப்படி காலே நேரத்துலே ?" கந்தன் சற்று விலகி நின்று கைகளைப் பின்புறமாகக் கட்டிக்கொண்டான்.


"அதுவும் கதவு வேறே தெறந்து கிடக்கு " என்று தொடர்ந்தாள் மீனா.


"கதவே வேணா அடச்சிடறேன்.." என்று சொல்லிக்கொண்டே கந்தன் கதவை அடைத்துத் தாளிட்டான்.


"ஆனா வெளிச்சம் இல்லாட்டி எப்படியோ இருக்கு " என்று சொல்லிக் கொண்டு, ஒரு தீக்குச்சியைக் கிழித்து

இரண்டு பொடி மெழுகுவர்த்திகளைக் கண்டுபிடித்து, மற்றுமொரு தீக்குச்சியைக் கிழித்து அவற்றைப் பற்றவைத்தான்.

ஒரு ஒரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவை திருதிருவென்று முழித்தன. ஆடைகளையும் தலைமுடியும் சரி செய்து

கொண்டிருந்த மீனா, "பட்டப் பகல்லே இது என்ன அட்டகாசம்..?" என்றாள்.


'உண்மையை சொல்லட்டுமா ? இன்னைக்குக் காலேலே நம்ம வீட்டு முன்னாலே ரெண்டு நாயிக ஒண்ணையொண்ணு விரட்டிக்கிடு

போச்சி.. " என்று சொல்லிவிட்டு கந்தன் சிரித்தான்.


"ஆமா, ஒடனே நெனப்பு வந்திரிச்சாக்கும்..? அன்னைக்கு ரெண்டு அணில்க, இன்னைக்கு ரெண்டு நாய்க.. " என்று சொல்லிக்கொண்டே

மீனா பாய் ஒன்றை எடுத்து உதறி அறையின் நடுவில் போட்டுவிட்டு அதன்மீது ஒரு தலையணையும் தட்டி போட்டாள். ஒரு மெழுகுவர்த்தி

அணைந்துவிட்டது. அதைப் பற்றவைத்துகொண்டிருந்த கந்தன், "அன்னைக்கு அந்த அணில்க எப்படி ? நாம் எவ்வளவு பக்கல்லே

போய் வேடிக்கை பார்த்தோம். எப்படி இரண்டும் ரொங்கிகி கிடந்திச்சு.. ?" என்று அணில்களை வியந்தான். அவன் அவளருகே

சென்று உட்காரவும் அவள். " நாமும்தான் ரொங்க்கிக் கிடந்திருக்கோம்.." என்று சொல்லிச் சிரித்தாள். அவன் சிரிக்கவில்லை.

அவளைக் கட்டியணைத்து முத்தமிட்டான். இருவரும் படுத்தனர்.


"நாய்க செய்யறது அசிங்கமில்லையா.. " என்றாள் அவள்.

"அபூர்வம். ஆனா அதுகளெக் கண்டா எல்லாருக்கும் பொறாமையா இருக்கும் போல.." என்றான் கந்தன்.

"யானைங்களெப் பத்திக் கேள்விப்பட்டிருக்கீங்களா.." என்று கேட்டாள் மீனா.

"ஆமா.. ஆமா.. கேள்விப்பட்டிருக்கேன். என் சிநேகிதன் ஒருத்தன் தேயிலத் தோட்டத்துலே வேலை பார்த்தான். சுத்து

வட்டாரத்திலே யானைங்க வருமாம். போகுமாம். ஒரு நாளைக்கு யானை அலர்ற சத்தம் கேட்டிச்சாம். ....

ஒரு பெண்யானை ரெண்டு தேக்கு மரத்துக்கு ஊடே சிக்கிட்டு அலறிகிடு இருந்த்திருக்கு.. ஒரு ஆண் யானை தும்பிச்சங்கைனாலே

பெண் யானையைப் போட்டு இளுத்துக்கிட்டு இருந்திரிக்கு. ஆளுங்க பக்கத்துலே போகவும் ஆண் யானை அவுங்களே வெரட்டி

அடிச்சிதாம்.. கொஞ்சம் தலையைத் தூக்கிக்க.. முடியை எடுத்து பின்னாடி போட்டுக்க.. "


"அப்புறம்.. ?" என்று கேட்டாள் மீனா.

"ஆளுங்க தூரத்திலே இருந்துகிட்டே வேடிக்கை பாத்திருக்காங்க.. நாள் பூரா ஆண் யானை இளுக்கவும் பெண் யானை

அலறவுமா இருந்திருக்கு.."

"அய்யோ.. மெள்ள.." என்றாள் மீனா.

"சரி. மெள்ளத்தான். கதையை முளுக்க கேக்கலேயே ? அடுத்த நா காலேலேதான் அலறல் நின்னதாம். லைன் ஆளுங்க

என்னேண்ட்டுப் போய்ப் பார்த்திருக்காங்க. .பெண் யானை செத்துகிடந்தது. ஆண் யானையைக் காணேம்."

"கண்றாவி.. " என்றாள் மீனா.

"அப்ப மறந்திடு.. " என்றான் கந்தன்.

"எதெ. "

"யானைகளெ மறந்திடு. அணிகல்களெ நெனெச்சிக்க.."

கந்தன் மீனாவைத் தன் பக்கம் திருப்பி, முகத்தை அவளது மார்பில் புதைத்துக்கொண்டான்.

"ஆமா.. ஒண்ணு கேக்கணூம்ண்ட்டு தோணுது.. " என்றான் கந்தன்.

"என்ன..?"

"நைட்லே அக்கா வூட்டுக்கு கண்டவனெல்லாம் வர்றானே. அப்பவும் ரொங்கிக் கெடந்திருக்கயா..?"

"அக்கா.. வூட்டுக்கு கண்டவங்க எல்லாம் ஒண்ணும் வரதுல்லே, ஏகதேசமா டீஷண்ட்டானவங்கதான் வருவாங்க. அதுவும்

காலேஜு ஸ்டூட்ண்ட்ஸ் வந்தா குஸியா இருக்கும்.."

"எப்படி குஸியா இருக்கும்..?"

அய்யோ கடிக்காதீங்க.. வலிக்குது.." என்று இலேசாய் அலறினாள் மீனா.

"சரி.. சரி. கடிக்கலே.. எப்படி குஷியா இருக்கும்.. " என்று திரும்பிக் கேட்டான் கந்தன்.

"பஸ்ட் டிரிப்பா இருந்தா தொடறதுக்கு முன்னாடி டயர் பஞ்சர் ஆயிடும்.." என்று சொல்லிவிட்டு மீனா சிரித்தாள்.

"உம்." என்றான் கந்தன்.

"பழக்கப்பட்ட பசங்க அந்த சினிமாக்காரி மாதிரி இருக்கே. இந்த சினிமாக்காரி மாதிரி இருக்க எம்பாங்க.."

"உம்."

"நாம இரண்டுபேரும் எங்காச்சும் ஒடிலாம்பாங்க செலர், போனவாரம்னு நெனக்கிறேன். ஒரு தம்பி என்ன சொல்லிச்சு தெரியுமா?

"உம்.. என்ன சொல்லிச்சு.."

"என்னெப் பொம்பளேன்னுட்டு நெனச்சிக்கிட்டு நீ ஆம்பிளே மாதிரி நடத்துக்கோனிச்சு.." என்று சொல்லிவிட்டு மீனா சிரித்தாள்.

"உஹ¤ம்.."

"ஒரு வாட்டி ஒரு பெரிய மனுசன் வந்தான். பாத்தாலே பயமா இருந்துச்சு. முரடன் மாதிரி இருந்தான். என் காலே நல்லா சோப்புப்

போட்டுக் களுவிட்டு வரச் சொன்னான். அஞ்சு, பத்து நிமிஷம் என் காலே முத்தமிட்டு அளுதுக்கிட்டே ரூமை விட்டு வெளியே போனான்.

இருந்திட்டுப் போங்கன்னேன்.. 'பைத்தியக்காரத்தனம்'னு சொல்லிட்டு போயிட்டான்."

'அப்படியா..? சரி நல்லாப் படுத்துக்க.." என்றான் கந்தன், மீனாவின் முகத்தை உற்று நோக்கிக்கொண்டே.

"சமயத்திலே அந்தப் போக்கிரியெ கொன்னுப் போடுவோனானு தோனுது.. ஆனா. ஒன்னெத் தந்தானேனிட்டுத்தான் சும்மா இருக்கேன்."

என்றான்.

"அவர் சொந்தத்துல கார் வச்சிருக்காராமே..? "

"அவனுக்கென்ன? காரும் வாங்குவான்; ஏரோப்பிளேனும் வாங்குவான். எங்கிட்ட மட்டும் பத்தாயிரம் தாப்பாப் போட்டிருப்பானா?"


"பத்தாயிரம் இருக்குமா?"

"பின்னே? பதினெட்டு, பத்தொன்பது பெர்ற வீட்டே பத்துக்கு விக்க வச்சான். வீடு வாங்கின பார்ட்டிகிட்டேர்ந்து மூவாயிரமோ, நாலாயிரமோ வாங்கியிருப்பான். எங்கிட்டேர்ந்து வேற கமிஷண்ட்டு ஐந்நூறு வாங்கிட்டான்."


"நீங்க் அப்போ வெவரம் தெரியாதவரு.."

"அம்மாவும் போயிட்டாங்க.."

"சரியா இருக்கா..?"

அவள் தலையை அசைத்தாள்.

"தலையணை வச்சிட்டிருக்கியா ?"

"இல்லே. வேணுமா..?"

"வேண்டாம். சரியாத்தான் இருக்கு.."


சில நிமிடங்களுக்கு இருவரும் அவர்கள் பார்த்து ரசித்திருந்த அணில்கள் போலவே இருக்கின்றனர். இருவரிடத்தும் கட்டுப்பாடான தாள லயித்தோடு கூடிய இயக்கம். அசிங்க உணர்வே இல்லாத பரஷ்பர ஸ்பரிசங்கள். குடிசை பூராவுமே ஒரு வகையான விறைப்பு நிலவுகிறது. இருவர் உள்ளத்துள்ளும் சிறதளவு சிந்தனையும் இல்லை. சில நிமிடங்கள் செல்கின்றன. படிப்படியாக பொழுது விடிவது போல் இருவருள்ளும் தன்னுணர்வு தலையை உயர்த்துகிறது.


கொஞ்சமும் ஒசை ஏற்படுத்தாது கந்தன் எழுகிறான். மீனா கண்களை மூடி படுத்துக்கிடக்கிறாள். அவள் அருகே உட்கார்ந்துகொண்ட அவன் ஒரு சிகரெட்டைப் புகைக்கிறான். பிறகு மெதுவாக எழுந்திருந்து ஒரு அரை டிராயரை மட்டும் அணிந்துகொண்டு, ஒரு சோப்புக்கட்டியையும், ஒரு துண்டையும் எடுத்துக்கொண்டு குளிக்க வெளியே வரத் தயாராகிறான். அவளிடமிருந்து ஒரு விசும்பல் கிளம்புகிறது. நின்று பார்க்கிறான். மீனாவின் மூடிய கண்களைப் பொத்துக்கொண்டு கண்ணீர் அவள் கன்னங்களை நனைக்கிறது. விம்மல் அழுகையாக மாறுகிறது.


"என்னங்க சந்திரனை தேடிக் கண்டுபிடிக்க வேண்டாங்களா ?" என்று உளறுவதைப்போல் அவள் கேட்கிறாள்.

"நாம் தேடாத இடமா..? " என்கிறான் அவன். "நாலு வருஷமாயிரிச்சே..! "

"உம்.."

"ஒங்களுக்கு சந்திரன் நெனெப்பே வரதில்லையா..?"


கந்தன் பதிலளிக்காது கதவை திறந்துகொண்டு, வெளியே போய்ப் பல் விளக்கிக் குளிக்க ஆரம்பிக்கிறான். அவன் குளித்து முடியும்வரை ஒப்பாரி போன்ற அழுகை அவன் காதுகளில் விழுந்துகொண்டிருக்கிறது.

0 பின்னூட்டங்கள்: