பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - சுகிர்தராணி - 2

கடைசி விருந்து
- சுகிர்த்தராணி


விதைகளற்ற பழுத்த கனி ஒன்று
என்னிடம் தரப்பட்டது

நீலவெளிச்சப் பின்னணியில் அதைப்பற்றிய
ரகஸியங்கள் என் காதில் ஓதப்பட்டதும்
முகத்தை எப்படி வைத்துக்கொள்வ தென்று
எனக்கு தெரியவில்லை
உன் நா வறட்சி அடையும்போது
வித விதமான சாறு பிழிந்து தரவேண்டுமாம்

பட்டாம்பூச்சியின் தாவலைப் போல
பிழிவதும் குடிப்பதும்
ஆரம்பத்தில்ல் கலையாக இருந்தது

பின்பு உறங்கும் வேளையில் கூட
உன் வாய் சாறு நிரம்பியதாகவும்
உனதொருகை குவளையை
இறுக்கியதாகவும் விளங்கின

காலாவதியான சுரங்கத்தின் உட்குடைவாய்
கனியின் பகுதிகள் பொலிவிழந்த பின்னும்
குடிப்பதற்குக் கேட்கின்றாய்

என்மீது உருண்ட திரண்ட
உன் பிரியத்தையே பிழிந்து தருகின்றேன்
அது விஷச்சாறாகவும் இருக்கலாம்.

0 பின்னூட்டங்கள்: