பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - பெனாத்தல் சுரேஷ் - 4

நம்பிக்கை
- பெனாத்தல் சுரேஷ்


ஒளிரத்தான் செய்கிறது சூரியன் -
ஊழி வந்து பிரட்டிப்போட்ட கடற்கரையிலும்.
பொழியத்தான் செய்கிறது மேகம் -
நடுங்கி அடங்கிய நிலத்தினிலும்.
புணரத்தான் செய்கிறார்கள் பெற்றோர் -
தீ வந்து மகவு தின்ற வீட்டிலும்..
நம்பத்தான் வேண்டும் நாமும் -
நாளையேனும் நற்பொழுதாய் விடியுமென.

கவிதை எழுதுவது என் கெட்ட வழக்கங்களில் ஒன்றல்ல. இருந்தாலும், அருண் மற்றும் பாஸிடிவ் ராமாவின் இன்றைய நம்பிக்கைக் கவிதைகளால் உந்தப்பட்டு நானும் புணைந்தேன் ஒரு கவிதை - நாராயணன் வெங்கிட்டுவின் போட்டிக்காக.

0 பின்னூட்டங்கள்: