பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - ஆதவன் தீட்சண்யா

ஆதவன் தீட்சண்யா - அறிமுகம்

எழுத்து, இயக்கம் எல்லாம் மக்களுக்காகவே என்று இயங்கும் தமிழ் படைப்பாளிகளில் மிக முக்கியமானவர் ஆதவன் தீட்சண்யா. புறத்திருந்து, பூஜ்ஜியத்திலிருந்து துவங்கும் ஆட்டம், தந்துகி எனும் மூன்று கவிதை நூல்களையும், எழுத வேண்டிய நாட்குறிப்பின் கடைசி பக்கங்கள் எனும் சிறுகதை தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். கட்டுரையாக எழுத வேண்டிய ஒரு செய்தியை சிறுகதையாக எழுதுவதும், ஒரு நாவலுக்கான கருப்பொருளை ஒரு கவிதையில் பொருத்திச் செல்வதும், எழுத்தில் புதுப்புது வடிவங்களை பழகுவதும் ஆதவனுக்குக் கைவந்த கலை. 'புதுவிசை' இதழின் ஆசிரியராகவும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளராகவும் செயல்படுகிறார்.

ஒடுக்குமுறை எந்த வடிவில் இருந்தாலும் அதை உக்கிரமான மொழியில் எதிர்கொள்ளும் ஆதவன், எழுதுவதோடு தன்னுடைய வேலை முடிந்தது என்றில்லாமல், போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள் என மாநிலம் முழுவதும் பிரயாணம் செய்தபடி இருக்கிறார்.

ஆதவனின் அனுமதியுடன் அவரது இரு கவிதைகளையும், சிறுகதையையும் பண்புடன் குழுமத்தின் ஆண்டுவிழா கொண்டாட்டத்திற்காய் இனிய நண்பர் கென் பெற்றுத் தந்தார். அவருக்கும், பண்புடன் குழுமத்தின் உறுப்பினர்களோடு தம் படைப்புகளை பங்கு வைக்க முன் வந்த தமிழின் முக்கிய படைப்பாளியான ஆதவன் தீட்சண்யாவுக்கும் நன்றி!.

0 பின்னூட்டங்கள்: