மீட்சி
- ஷைலஜா
உறவினர்களிடம்
பேசும்போதெல்லாம்
ஊர்பேர்தெரியாதவர்களிடம்
பேசுவதாய்
உணர்கிறேன்
உன்னிடம் பேசும்போதோ
புதுப்புது உறவுகளைக்
காண்கிறேன்
இசையாய்நிறைகிறது
உன் காலடி ஓசை
தாலாட்டாய் நினைத்தே
உறங்கிவிடுகிறேன்
ஒவ்வொருநாளும்
உன் மௌனத்தில்
காலம் கரைகிறது
மீட்டுத்தர வருவாயா
விரைந்து?
தனிமைவீட்டில்
ஞாபகங்களே
வாசற்கோலங்கள்
உன் பார்வைக்குள்
அகப்பட்டுக்கொண்டபோதே
சிறைபிடித்துப்போனாய்!
விடுதலைவேண்டாம்
கூண்டுக்கிளிவாழ்க்கை
குதூகலமானதுதான்.
பண்புடன் ஆண்டு விழா - போட்டிக்கு வந்த படைப்புகள் - 16
மதியம் நவம்பர் 28, 2008
பதிவு வகை : கவிதைகள், போட்டிக்கு வந்த படைப்புகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்:
Post a Comment