பண்புடன் ஆண்டு விழா - போட்டிக்கு வந்த படைப்புகள் - 18

இளைப்பாறும் நேரத்திலாவது
- ஷைலஜா


வாழ்க்கைத்துணையாகத்தான்
வரவில்லை
வழித்துணையாகவாவது
வந்துவிடு

இளைப்பாறும் நேரத்திலாவது
இனியவாழ்வு என்ன என்பதைக்

காணவேண்டும்

தாயின் இடுப்பைநனைக்கும்
சின்னகுழந்தையின்
ஈரத்துணிமாதிரி
உன் நினைவுகள்

சிறுவாட்டில்
சேர்த்துவைத்த
சில்லறைகளாய்
பழகியபொழுதின்
புன்னகைகள்

மனச்செடியில்தினமும்

வளர்ந்து

உன் அருகாமையில்

மலரத்துடிக்கும்
நேச அரும்புகள்

காற்றுவயலில்
அறுவடைக்குக்
காத்திருக்கும்
கவிதைப்பயிர்கள்
இளைப்பாறும் நேரத்திலாவது
இனியதுணையாக வந்துவிடு!

2 பின்னூட்டங்கள்:

ராமலக்ஷ்மி said...

அருமையான கவிதை.

//தாயின் இடுப்பைநனைக்கும்
சின்னகுழந்தையின்
ஈரத்துணிமாதிரி//

//சிறுவாட்டில்
சேர்த்துவைத்த
சில்லறைகளாய்//

நினைவுகளுக்கும் புன்னகைகளுக்கும் பொருந்தி வரும் உவமைகள் அழகு.

Several tips said...

நல்ல பதிவு
மிகவும் அருமை