குழந்தையின் உறவுகள்
- மோகனன்
அழும் குழந்தையை
அமைதிப்படுத்த
அன்று...
அம்மாவின் தாலாட்டு
அப்பாவின் ஆறுதல் மொழி
அண்ணனின் பாட்டு
அக்காவின் கொஞ்சல்
தாத்தாவின் அரவணைப்பு
பாட்டியின் பாசமொழி...
என உறவுகளின்
பாச விசாரிப்புகளில்
அக்குழந்தையின் வீறிடல் நின்றது..!
இன்றோ வீறிடும்
செல்போன் பாடலோடு
போகிறது
அக்குழந்தையின் உறவுகள்..!
(சென்னையில் தனிக்குடித்தனம் நடத்தும் இளம்தம்பதி , தங்கள் குழந்தையை அமைதிப்படுத்த செல்போனை பயன்படுத்தினர். அதைக்கண்ட போது, என்னுள் தோன்றியதை 27.03.2005 -ல் எழுதியது)
பண்புடன் ஆண்டு விழா - போட்டிக்கு வந்த படைப்புகள் - 6
மதியம் நவம்பர் 18, 2008
பதிவு வகை : கவிதைகள், போட்டிக்கு வந்த படைப்புகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்:
Post a Comment