பண்புடன் ஆண்டு விழா - போட்டிக்கு வந்த படைப்புகள் - 7

என் சொத்து
- விசாலம்


என் தாயின் முந்தானை
இதோ இந்தப் பெட்டியில் ,
இதுதான் என் கோயில்
இதுவே என் தெய்வம்
குழந்தைப் பருவம்,
பல முறை கக்கல் .
அம்மாவின் புடவையில் .
முகம் சுளிக்காமல்
துடைத்தது அந்தக் கை

இரண்டு வயது பாலகன் ,
மழையில் நனைந்தேன்
வந்தன தும்மல்கள்,
மூக்கொழுகி நின்றேன்
கைக்கொடுத்தது
அம்மாவின் முந்தானை
அன்பாக துடைத்து .

கடும் சுரம் வந்தது ,
இடுப்பில் அள்ளிக்கொண்டாள்
ஓடினாள் டாக்டரிடம்
நடுவில் வாந்தி எடுத்தேன் ,
தன் தலைப்பில் ஏந்தினாள்
முகத்தில் சுளிப்பில்லை
அதில் ஒரு சலிப்புமில்லை

கிரிக்கெட் மேட்ச்சில்
செயித்து வந்தேன் ,
பெருமையுடன் பார்த்தாள்
வியர்வை ஒழுக நின்றேன் ,
ஒத்தி எடுத்தாள்,
தன் முந்தானையால் .
என் திருமணம் ஆனது
எனக்குச் செய்ததை அவள்,
தன் பேரனுக்குச் செய்தாள் ,,
அவள் முகம் சுளுக்காமல் .

இன்று அவள் இல்லை .
நைந்துப் போன் புடவையில்
அவளை நான் பார்க்கிறேன் .
என்ன தியாகம் ! என்ன அன்பு !
கோடிக்கோடி கொடுத்தாலும்
அம்மாவை வாங்க முடியுமா?
அவள் இடத்தை நிரப்ப முடியுமா ?

0 பின்னூட்டங்கள்: