பண்புடன் ஆண்டு விழா - போட்டிக்கு வந்த படைப்புகள் - 2

விவாகரத்து வளர்வது ஏன்?
- விசாலம்


ஐமபது வருடங்கள் நிறைவாகக் கழித்த ஒரு தம்பதி தங்கள் மண நாளைக் கொண்டாடினார்கள்,சென்னையில் எனக்கும் அழைப்பு வந்திருந்தது,அங்கே போனாலே
என்ன மன மகிழ்ச்சி! பிள்ளைகள், அவர்களது மனைவிகள் ,பெண்கள் அவர்களது
கணவன்மார்கள் தவிர அவர்களது வருங்கால சந்ததியர்கள் ஒன்றாம் வகுப்பிலிருந்து
காலேஜ் படிக்கும் வரை அதாவது பேரன் பேத்திகள் நிரம்பி வழிய அந்த ஹாலே களைக்
கட்டியது ,அதைத் தவிர உறவினர்கள் ஜே ஜே என்று கூடி இருந்தார்கள்,
"பாட்டி போட்டோவுக்கு போஸ் கொடுங்கோ ,ஸ்மைல் ப்ளீஸ்"
"போடா கண்ணா வம்பு பண்ணிண்டு,,,,,"
"அதான் அவன் ஆசையா சொல்றானே கேளேண்டி கமலி" ,,,,, சரி எடுடா போட்டோ "
அருகில் நெருங்கி தாத்தா பாட்டியை அணைக்க
"இது இது இதுதான் நான் எதிர்ப்பார்த்தேன்" என்று விளம்பர ஸ்டைல்லில் ஒரு பேத்தி
கிண்டல் செய்ய ஒரே கைத்தட்டல் ,அதன் பின் அவசரமாக ஒரு ஆட்டொ வர அதிலிருந்து
ஒரு இளைஞன் இறங்கினான் அவன் கையில் ஒரு பெரிய கேக் டப்பா ,,,,,,,
"ஹாப்பி வெட்டிங் டே ஹாய்,,,,,தாத்தா " என்று வந்தவன் கீழே விழுந்து நம்ஸ்கரித்தான்
நம் கலாசாரமும் அவனுக்குத் தெரிந்திருக்கிறது என்பதை நினைத்து ம்னம் மகிழ்ந்தேன்,
" பாட்டி முட்டைச் சேர்க்காத கேக் ! ஸ்பெஷல் ஆர்டர் !தாத்தா,,,,பாட்டி வாயில் போடுங்கோ
ஆஹா பாட்டி ,வெக்கத்தைப்பார்" இப்படி ஒரு குரல் ஒரு மூலையிலிருந்து வந்தது ,,,உடனே
ஒரு க்ரூப் போட்டோ ,,,,,,,,
ஆக மொத்தம் எங்கும் மகிழ்ச்சியின் அலை ,,இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு குடும்பமா?
என் மனம் பேப்பரில் படித்தச் செய்தியை அசைப் போட்டது அது என்ன செய்தி?ஆம்
சென்னையில் டைவர்ஸ் கேஸ் நாளுக்கு நாள் பெருகி வருகிறது ,குடும்பக்கோர்ட் இதைச் சமாளிக்க முடியாமல் திணருகிறது ,சுமார் 6000 கேஸ்கள் இருப்பில் உள்ளன ,ஒவ்வொரு நாளும் சுமார் ஒரு முப்பது கேஸ்கள் பதிக்கப்படுகின்றன
நாளும் சுமார் ஒரு முப்பது கேஸ்கள் பதிகப்படுகின்றன.,,
அந்தக் காலத்தில் பல வருடங்கள் வாழ்ந்து தம்பதிகள் தங்கள் வாழ்வில் நிறைவைக் கண்டனர்,
அப்படி எதாவது உரசல் வந்தாலும் விட்டுக் கொடுக்க்கும் தன்மை நிறைய இருந்தது
தற்காலத்தில் திருமணம் ஆன இரண்டு மாதங்களிலேயெ கருத்து வேற்றுமை வந்து பெண் தன் பெற்றோரிடம் திரும்பி வந்து விடுகிறாள். பெற்றோர்களும் இது பற்றி பெண்ணிடம் பேச பயப்படுகின்றனர் ,சிலசமயம் பையன் வீட்டில் தப்புக்கண்டுப்பிடிக்கப்படுகிறது இதேபோல் பையன் வீட்டிலும் பெண் மேல் தப்புச் சொல்ல பெண் , தான் சுதந்திரமாக இருக்க விரும்பி விவாகரத்துக்கும் துணிகிறாள்,,சென்னையில் இதைப் பற்றி விசாரிக்க TVSLSA ,, தமிழ் நாடு ஸ்டேட் லீகல் சர்வீஸ் அசோசியேஷன் தனிப்பட்ட டாக்டர்களை நியமித்திருக்கின்றனர்,அங்கு கௌன்சிலங் என்ற உள்ளப்பறமாறல் நடைப்பெருகிறது ,ஒருமுறை ஒரு இளம் தமபதி கௌன்சிலிங்க்கு
வந்திருந்தனர் .அவர் சேர்ந்து வாழ பிரியப்படவில்லை விவாகரத்து செய்ய விருப்பம் என்றனர் அதன் காரணம் கேட்ட போது கணவன் சொன்னது "என்க்கு ஆம்லெட் மிகப்
பிடிக்கும் ,ஆனால் இவள் அந்த வாடை வந்தாலே கத்த ஆரம்பித்து விடுகிறாள்,,படார் என்று கதவைச் சார்த்திக் கொண்டு வெளியே போய்விடுகிறாள்,இந்தச் சின்ன சாப்பாட்டு விஷயத்திலேயே இந்த கருத்து வேற்றுமை என்றால் எப்படி என் வாழ்க்கையில் நிம்மதி இருக்கும்?"
பெண் சொன்னது ,"என் திருமணம் முன்பாகவே எனக்கு இந்த வாசனை அலர்ஜி வாந்தி வந்து விடும் என்று மிக கிளியராகச் சொன்னேன் அப்படியும் கேட்காமல் செய்கிறான் .ஆண் என்றாலே அத்தனை ஈகோ ,தன்னனத் தட்டிக் கேட்க யாருமில்லை என்ற நினைப்பு " தினமும் இந்த முட்டைச் சண்டையில் காலைப் பொழுது ஆரம்பித்து கல்யாணத்தையே ஒரு முட்டையாக்கி
விட்டது ,யார் விட்டுக் கொடுப்பது என்றப் பிரச்சனை ,,,,

பழையக் கால தாத்தா பட்டிகள் இன்றும் கிராமத்தில் ஊஞ்சலில் ஆடிக்கொண்டு தன் அமெரிக்கவில் இருக்கும் செல்வங்கள் நினைப்பில் வாழ்ந்து வருகிறார்கள்,தன் மகன்
மக்ள் வெளியூர்களில் இருந்தாலும் ஏதோ ஈமெயில் வழியாகப் பேசி திருப்தி அடைகிறார்கள்.சில சமயம் மகள் பிரசவம் அல்லது பேரக்குழந்தையைப் பார்த்துக் கொள்ள என்று அங்கு போனாலும் அந்தச் சூழ்நிலைக்கும் அட்ஜஸ்ட் செய்ய வேண்டியிருக்கிறது அதையும் அவர்கள் தன் செல்வங்களுக்காக மகிழ்ச்சியுடன் செய்கிறார்கள் ஒரு இல்லறம் நன்கு நடக்க பெண்கள் விட்டுக் கொடுத்து ஈகோ இல்லாமல் அன்பால் கவர வேண்டும் சிறு பிரச்சனையைப் பூதாகாரமாக ஆக்காமல் மனதளவில் மன்னித்து விட எல்லாம் சுமூகமாகி விடும் மனித நேயம் , சேவை மனப்பான்மை சிறந்த இல்லறத்திற்கு நிச்சியம் தேவை இவை பழையக் காலத்து தம்பதிகளிடம் அதிகமாக இருந்ததால் வாழ்க்கை என்ற படகு ஆபத்தில்லாமல் ஓடிற்று ,கணவன் அளவு படிப்பு இல்லாமல் இருந்ததும் ஒரு காரணம் ,தனக்கு ஒரு பாதுக்காப்புத் தேவை என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்தது அப்படியே ஏதாவது சிக்கல் இருந்தாலும் பெண்ணின் தாய் ,பெண்ணிற்கு புத்திமதி சொல்லி திரும்ப அனுப்பி விடுவாள்,தன் பதியே தனக்கு எல்லாம் என்ற ஒரு நிலை ஏற்படுத்திக் கொண் டு விடுகிறாள் கடவுள் கொடுத்தது இதுதான் என்று மனம் நிறைந்து விடுகிறாள் ,முன்பு மனைவிகள் தன் கணவன் பெயரையே எடுக்கத் தயங்குவார்கள் ,பின் பெயர் சொல்ல ஆரம்பித்தனர் இப்போது இருக்கும் நிலையோ பெயருடன் 'டா"போட்டுப் பேசும் வழக்கம் சர்வ சாதாரணமாகிவிட்டது,

இதில் அவர்கள் இருவரிடையே சமத்வத்தைக் காணுகின்றனர் ,கருத்து பரிமாறவோ காதல் செய்யவோ இருவரும் தேவை, தவிர இருவரும் படிப்பிலே சமமாக இருக்கின்றனர் , தவிர தற்காலப் பெண்களுக்குத் தன்நம்பிக்கை மிகவும் அதிகம் ,தன் காலால் நின்று
சம்பாதிக்கும் திறமை அதிகமாகவே உள்ளது , .ஆண் ,பெண் இருவரும் ஒன்றுதான் என்ற எண்ணமும் வலுவாக உள்ளது உரிமைப் போராட்டம் எட்டிப் பார்க்கிறது ,ஆண் அல்லது பெண் இருவர் மனம் ஒப்பவில்லை என்றால் வேறொரு மனம் ஒப்பிய ஒருவரிடம் செல்லவும் துணிகின்றனர்.இன்று சிலர் திருமண்ம இல்லாமலே அதில் நாட்டமிலாமல் வெறும்
நட்பில் "தோழன் அல்லது தோழி என்ற பெயரில் வாழ்க்கை நடத்தவும் துணிந்து விட்டனர் ,இதில் வெளி நாட்டுக் கலாச்சாரம் நுழைந்து இருக்க்லாம் ,இது சரியா ? அல்லது தவறா?

எது எப்படி இருந்தாலும் முன்பு போல் தியாகம் ,சகிப்புத்தன்மை விட்டுக் கொடுக்கும் தன்மை .
அன்பு பாசம் பெரியர்களிடம் மரியாதை, கண்ணியம் கட்டுப்பாடு எல்லாம் குறைந்திருக்கின்றன் என்பது என்னவோ உண்மை தான் ,, டைவர்ஸ் வளருகிறது ,,,,,,,,

0 பின்னூட்டங்கள்: